செய்திகள் பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!… post thumbnail image
உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார்.அப்போது மர்ம நபர்கள் மூன்று பேரை அவர் வழிமறித்து தங்க செயினை பறித்துள்ளனர். மேலும், ரூ. 5 ஆயிரத்தை பறித்துள்ளனர்.

அப்போது ஆசிரியை சத்தம் போட்டுள்ளார். செயின் மற்றும் பணத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் போராடியுள்ளார். அப்போது அந்த குண்டர்கள் ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.பின்னர் ஆசிரியை சாலையில் ஓரம் இருந்த புதருக்கு கரகரவென இழுத்து சென்றுள்ளனர். அங்கு ஆசிரியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. ஆசிரியிடம் இருந்த செயின் மற்றும் பணத்தை அவர்கள் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். அப்போது ஆசிரியையின் சத்தம் கேட்டு அப்பகுதியாக சென்றவர் குற்றவாளி ஒருவனை மடக்கி பிடித்தார்.

மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளார். என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி