செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இண்டர்போலின் பிரசாரத் தூதராக நடிகர் ஷாருக்கான் நியமனம்!…

இண்டர்போலின் பிரசாரத் தூதராக நடிகர் ஷாருக்கான் நியமனம்!…

இண்டர்போலின் பிரசாரத் தூதராக நடிகர் ஷாருக்கான் நியமனம்!… post thumbnail image
புதுடெல்லி:-பல்வேறு நாடுகளுக்கிடையில் ரகசிய தகவல்களை பறிமாறிக் கொள்ளவும் ஒரு நாட்டில் குற்றங்களை செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பியோடும் பேர்வழிகளை தேடிக் கண்டுபிடித்து குற்றம் நிகழ்ந்த நாட்டிடம் ஒப்படைக்கவும் சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் செயல்பட்டு வருகின்றது.

சர்வதேச அளவிலான ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கள்ளநோட்டு கும்பல், இணையதள மோசடி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இண்டர்போல் போலீஸ் அதிகாரிகள் துப்பறிந்து, மேற்படி குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் கதாநாயகனும் உலகம் முழுவதும் பிரபலமான நடிகருமான ஷாருக் கானை மற்றுமொரு பிரசாரத் தூதராக இண்டர்போல் நியமித்துள்ளது.குற்றங்களை எதிர்த்து, சட்டத்தை மதித்து மக்கள் வாழ வேண்டும் என்ற இண்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய நடிகர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷாருக் கான், கடவுளைத் தவிர, இந்த பூமியில் நான் யாருக்கும் பயப்படக் கூடாது. நான் யாருக்கு அநீதி இழைக்கக்கூடாது. ஒருதலை பட்சமாக நடந்துக் கொள்ளக் கூடாது.இதற்காக நான் அவதிப்பட நேரிடினும் வாய்மையால் பொய்மையை தேடிக் கண்டுபிடித்து, அதனை எதிர்த்திட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதைப்போல் இண்டர்போலின் பிரசாரத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை நான் மிகச் சிறந்த கவுரவமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி