செய்திகள் ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…

ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!…

ஆதார் அட்டை கிடைக்காததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!… post thumbnail image
விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ள திகுவா கோலாபட் கிராமத்தை சேர்ந்தவன், கொர்ரா பாலகிருஷ்ணா(11). அதே மாவட்டத்தில் உள்ள கில்லோகுடா அரசு ஆசிரம உயர்நிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.

கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு உதவிகளைப் பெற ஆதார் அட்டை எடுக்கும்படி கொர்ரா பாலகிருஷ்ணாவை பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், பிறவியிலேயே கையின் மூன்று விரல்கள் ஒன்றாக இணைந்தபடி பிறந்த அவனது விரல் ரேகையை பதிவு செய்ய முடியாததால் அவனுக்கு ஆதார் அட்டை கிடைக்காது என்று கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த கொர்ரா பாலகிருஷ்ணா நேற்று அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி