செய்திகள்,திரையுலகம் கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?…

கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?…

கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?… post thumbnail image
சென்னை:-சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அஞ்சான்‘ படம் திரைக்கு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்திற்கு யூ சான்றிதல் கிடைப்பது அரிது. இந்நிலையில் அதிக சண்டைக்காட்சிகள் இருந்தும் இப்படத்திற்கு யூ சான்றிதல் கொடுத்துள்ளனர்.

இது எப்படி என்று விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேடு பரிசாக வாங்கி இருக்கிறார். இவர் மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ஆவார்.இவரை கைது செய்து விசாரித்த போது இதை கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் அஞ்சான் தெலுங்கு பதிப்பிற்கு ரூ. 50 லட்சம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து லஞ்சம் கொடுத்தவர்களும் கைது ஆவர்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி