செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…

நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…

நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!… post thumbnail image
சென்னை:-கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகே புதிய பாரதம் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில், புலிப்பார்வை படத்தில் பாலசந்திரன் தீவிரவாதி போன்று சித்தரித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது.

மேலும் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவின் ஆதரவாளர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதனால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும். மறுத்தால் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து புதிய பாரதம், அப்படத்துககு எதிராக தொடர்ந்து போராடும். விஜய், முருகதாஸ் இருவரும் கத்தி படத்திலிருந்து விலகாவிட்டால், விரைவில் அவர்கள் இருவரது வீடுகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி