செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!… post thumbnail image
சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியை அடுத்த ரெட்டியார் சத்திரம் நான்கு வழிச்சாலையில் நடந்து வந்தது.

இந்நிலையில், முனி படத்தை தயாரித்த சரண், அப்பட போஸ்டர் அச்சடித்தது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ரூ.25 லட்சத்திற்கு செக் கொடுத்துள்ளார் சரண். அந்த செக்கை, ஞானசேகரன் வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என்று திரும்பி வந்ததால், சரண் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் சிவகாசி போலீசார், படப்பிடிப்பில் இருந்த சரணை கைது செய்து, சிவகாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி