செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற பகத் பாசில் – நஸ்ரியாவின் திருமணம்…

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற பகத் பாசில் – நஸ்ரியாவின் திருமணம்…

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற பகத் பாசில் – நஸ்ரியாவின் திருமணம்… post thumbnail image
திருவனந்தபுரம்:- மலையாள நடிகை நஸ்ரியா ‘நேரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தார். மலையாளத்தில், பகத் பாசிலுடன் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு 21-ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் திருமணம் இன்று திருவனந்தபுரம் கழக கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. 2 பேரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது. இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24-ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) ஆலப்புழாவில் நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி