செய்திகள்,திரையுலகம் மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!… post thumbnail image
சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும் துல்கர் விரைவில் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து மம்முட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா மற்றும் வேறு சில முன்னணி நடிகர்களை வைத்துத்தான் மணிரத்னம் அடுத்த படத்தை இயக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. அந்தப் படம் பேச்சு நிலையிலேயே மிகவும் தாமதப்படுவதால் அதற்குள் வேறு ஒரு படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம். அந்தப் படத்தில் தான் துல்கர் நாயகனாக நடிக்க உள்ளார் என்கிறார்கள்.

தமிழில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த துல்கருக்கும் ஆசையாம். அதனால், மணிரத்னம் படத்தில் அவர் கண்டிப்பாக இடம் பெறுவார் என்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் தமிழிலும் ஒரு நிலையான இடத்தையும் பிடிக்க முடியும் என்றும் துல்கர் கருதுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி