செய்திகள்,திரையுலகம் மீண்டும் வில்லனாகும் ஆக்சன் கிங்…!

மீண்டும் வில்லனாகும் ஆக்சன் கிங்…!

மீண்டும் வில்லனாகும் ஆக்சன் கிங்…! post thumbnail image
ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த அர்ஜூன் ‘கடல்’ படத்தின் மூலம் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் பிரதிபலித்தார்.

இந்த படத்தையடுத்து இவருக்கு வில்லன் படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால், இவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இவர் இயக்கி, நடித்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினார்.

இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் பிற படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். மறுபடியும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இம்முறை தெலுங்கில் வில்லனாகிறார். அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் இவருக்கு வில்லன் வேடமாம். இப்படத்தை திரி விக்ரம் என்பவர் இயக்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி