செய்திகள்,திரையுலகம் தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…

தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…

தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!… post thumbnail image
சென்னை:-மறைந்த நடிகர் ஏ.நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவிற்கு தமிழ்ப் படத்தில் நேரடியாக அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். சென்னையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நாக சைதன்யாவுக்கு நன்றாகத் தமிழ் பேச வருமாம். சிறு வயதிலிருந்தே இங்கு வளர்ந்ததால் தமிழ்ப் படங்களின் மீதும் தீராத காதல் கொண்டிருப்பவர். அதனால்தான் தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

இது பற்றி நாக சைதன்யா சொன்னதாவது, எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்பதால் தமிழ்ப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், சரியான வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. சில இயக்குனர்களுடன் பேசி வருகிறேன், ஆனால் அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்க விருப்பப்படுகிறார்கள். இனிமேல்தான் இது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி