செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!… post thumbnail image
கொல்கத்தா:-அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச ஏர்வேக்கு சொந்தமான விமானம் 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிரே சவுதி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் அதே உயரத்தில் பறந்து வந்தது.

இதை பயணிகள் விமானத்தின் விமானி அரிபுல் இஸ்லாம் பார்த்து விட்டு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விட்டு தனது விமானத்தின் பறக்கும் உயரத்தை 29,000 அடியாக குறைத்தார்.அப்போது எதிரே வந்த சரக்கு விமானம் 32,000 அடி உயரத்தில் பறந்தது. இந்த நிலையில் பயணிகள் விமானம் மீண்டும் 33,000 அடி உயரத்தில் பறக்க உத்தரவு வந்தது. அதன்படி மீண்டும் 33,000 அடி உயரத்தில் பறந்தது. இறுதியில் 1,000 அடி உயர வித்தியாசத்தில் விமானங்கள் கடந்து சென்றது.விமானங்கள் பறக்கும் உயரம் குறைக்கப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டாலும் விமானியின் சாமர்த்தியத்தால் மோதல் தவிர்க்கப்பட்டது. இதனால் 148 பயணிகள் உயிர் தப்பினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி