செய்திகள்,திரையுலகம் குழப்பத்தில் நடிகர் சந்தானம்!…

குழப்பத்தில் நடிகர் சந்தானம்!…

குழப்பத்தில் நடிகர் சந்தானம்!… post thumbnail image
சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தபோது இந்த படம் வெற்றி பெற்றால் இனி தொடர்ந்து ஹீரோ வேடங்களுக்கு முதலிடம் கொடுப்பேன் என்று சொன்னார் சந்தானம். ஆனால் அவர் எதிர்பார்த்தது போலவே படமும் மெகா ஹிட் இல்லை என்றாலும் சுமாரான அளவு வெற்றி பெற்றது. அதோடு, அந்த படம் திரைக்கு வந்த நேரத்தில், அந்த படத்தை தயாரித்த பிவிபி நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திலும் சந்தானம் ஹீரோவாக நடிக்கப் போவதாக செய்தி வெளியிட்டது.

ஆனால், அப்படம் ஓடி முடித்தபிறகு அதுபற்றிய பேச்சே இல்லை. சந்தானம் கூட தனது புதிய படம் விரைவில் தொடங்கப்படும். அதில் விசாகா சிங், ஆஷ்னா சவேரி என தனது முந்தைய படங்களில் நடித்தவர்களே கதாநாயகி என்றும் தனது தரப்பில் இருந்து செய்தி வெளியிட்டு வந்தார். ஆனால், இப்போது அந்த படம் பற்றி விசாரித்தால் எந்த தகவலும் இல்லை.

காரணம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு நிறைய செலவு செய்து விட்டார்களாம். ஆனால் போட்ட பணம் மட்டுமே கைசேர்ந்ததால். பெரிதாக லாபம் இல்லை என்பதால் பிவிபி நிறுவனம் மீண்டும் சந்தானம் விசயத்தில் ரிஸ்க் எடுக்க தயாராகயில்லையாம். அதனால் சந்தானம் ஹீரோ வேசம் போடும் அடுத்தபடம் எப்போது என்பது குழப்பமாக உள்ளது. இதுபற்றி சந்தானம் தரப்பும் எந்தவித தகவலும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி