செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…!

என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…!

என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…! post thumbnail image
தமிழ் திரையுலகில் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை பதிவு செய்தார். ‘பேரழகனில்’ கூனனாக வந்தார். ‘காக்க காக்க’ படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டினார். ‘பிதா மகன்’, ‘நந்தா’ படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் கவர்ந்தார். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இளமை மற்றும் வயதான தோற்றங்களில் வந்தார். ‘7 ஆம் அறிவு’ படத்தில் போதி தர்மராக வந்தார். ‘சிங்கம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கர்ஜித்தார். இதனால் அடுத்த கமல் என்று சூர்யாவை வர்ணித்தனர்.

ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த ‘அஞ்சான்’ படவிழாவில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பேசும் போது, ஒவ்வொரு படத்திலும் கமலஹாசனை போல் உடலை வருத்தி கஷ்டப்பட்டு சூர்யா நடிக்கிறார் என்று பாராட்டினார்.

இதற்கு சூர்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, கமலஹாசனை போல் என்னால் நடிக்க முடியாது. அவர் நடிப்பு மட்டுமன்றி திரைக்கதை எழுதுகிறார். டைரக்டு செய்கிறார். தனது ஒவ்வொரு படத்தையும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறார். அவரைப் போல் என்னால் முடியாது. நான் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். முதல் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி