செய்திகள்,திரையுலகம் ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!…

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!…

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்பதும் முடிவாகியுள்ளது. இந்தப் படத்தை அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இப்போது இரண்டாம் பாகம் எடுப்பது ஒரு ஃபேஷனாகி விட்ட நிலையில் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த ‘கஜினி’ படத்தின் இரண்டாம் பாகமாக அந்தப் படம் இருக்குமா அல்லது வேறு புதிய கதையாக இருக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

சூர்யாவிற்கும், கௌதம் மேனனுக்கும் இடையே உருவான பிரச்சனை போன்றுதான் சூர்யாவிற்கும், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் பிரச்சனை உள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்ளும் சூழ்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் சேர்வது ஆச்சரியமாக உள்ளது என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்திலும், அடுத்து ‘மனம்’ விக்ரம் குமார் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படங்களை முடிக்கவே இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும். அப்படியிருக்க சூர்யாவும், முருகதாஸும் மீண்டும் இணைவது ஒரு வருடம் கழித்துதான் நடக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி