ஜெயம் ரவியுடன் பெயரிடப்பட்டாத படம் ஒன்றிலும் நடித்துவரும் அஞ்சலி இதிலும் கவர்ச்சியாகவே நடிக்கிறாராம். இந்நிலையில். அஞ்சலி தான் அடுத்த சில்க்ஸ்மிதா என தெலுங்கு பட இயக்குனர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டார். அவ்விழாவில் பிரபல இயக்குனர் ஒருவர் பங்கேற்று பேசுகையில் அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்–2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்றார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, கோபத்துடன் விழாவில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி