செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…

காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!…

காசாவில் 72 மணி நேர போர் நிறுத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்!… post thumbnail image
காஸா:-காஸா பகுதி மீது கடந்த 28 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் 1800-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ள நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இன்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி, அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரங்களுக்கு இந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டாலும் அதையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட போது, இஸ்ரேல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.

எனினும் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் போர் நிறுத்தம் தொடர்பான முடிவை எவ்வித நிபந்தனையுமின்றி தாங்கள் ஒப்புக்கொள்ள தயார் என இஸ்ரேல் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே போல் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான சமி அபு சுக்ரி, எகிப்து முன்வைத்த யோசனையை தாங்களும் ஏற்பதாக தெரிவித்தார். எகிப்து அதிகாரிகளும் இந்த 72 மணி நேரப் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி