செய்திகள்,திரையுலகம் மீண்டும் பட தயாரிப்பில் இறங்கும் நடிகை குஷ்பு…!

மீண்டும் பட தயாரிப்பில் இறங்கும் நடிகை குஷ்பு…!

மீண்டும் பட தயாரிப்பில் இறங்கும் நடிகை குஷ்பு…! post thumbnail image
‘வருஷம் 16’ படம் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பு. இப்படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதன் பிறகு தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

சுந்தர்.சியை மணந்த பிறகு சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கிய படங்களான ‘கிரி’, ‘ரெண்டு’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களை தயாரித்தார். அதன்பிறகு படங்கள் எடுக்கவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்குகிறார். ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி