செய்திகள்,திரையுலகம் நான்கு ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்!…

நான்கு ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்!…

நான்கு ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், வட்டாரம், அசல், மோதி விளையாடு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண்.தற்போது இவர் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சரண் இயக்கத்தில் மோதி விளையாடு என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படத்தில் மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இந்த படத்திற்கு சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைக்கிறார்.கடைசியாக சரண் இயக்கிய படம் அசல். இந்தப் படம் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது படம் இயக்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி