செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 150 நடன கலைஞர்களுடன் நடனமாடிய நடிகர் பிரசாந்த்…!

150 நடன கலைஞர்களுடன் நடனமாடிய நடிகர் பிரசாந்த்…!

150 நடன கலைஞர்களுடன் நடனமாடிய நடிகர் பிரசாந்த்…! post thumbnail image
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘சாஹஸம்’ . இப்படத்தை தியாகராஜன் ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அருண் ராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரசாந்துடன் நாசர், துளசி, தேவதர்ஷினி, லீமா, தம்பிராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், அபிசரவணன், ஜான்விஜய், மலேசியா அபிதா, ஹேமா ஆகியோருடன் வில்லன்களாக சோனுசூத், கோட்டா சீனிவாசராவ், ராவ்ரமேஷ், பெசன்ட்நகர் ரவி என ஒரு நட்சத்திர பட்டாளமே இடம் பெற்றிருக்கிறது.

இப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடனமாட இந்தி பட நாயகி நர்கீஸ் பக்ரி சென்னை வந்து தங்கியுள்ளார். கடந்த ஒரு வாரமாக 50 ரஷ்ய அழகிகளுடனும் 100 ஆண் நடன கலைஞர்களுடன் பிரசாந்தும் நர்கீஸும் ஆடிவரும் பாடல் காட்சிகளை ராஜீசுந்தரம் நடன இயக்கத்தில், சௌந்தர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தமன் இசையில், கார்க்கி வைரமுத்து எழுதிய ‘காரத்தில் காரத்தில் சில்லி இவ…’ எனும் பாடல் இதுவரை தமிழ் சினிமா சரித்திரத்தில் எடுக்கப்படாத புதுவிதமாக அமையும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த நடன அரங்கை பிரமாண்டமாக ஆர்ட் டைரக்டர் மிலன் அமைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி