செய்திகள்,திரையுலகம் அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…

அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…

அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தும், விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தில் ஷங்கரும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இதில் ‘அஜீத் நடித்து வரும் படம் தற்போதுதான் பாதி முடிவடைந்துள்ளது. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீதம் இருக்கின்றன. ஷங்கரின் ‘ஐ’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற் வருகின்றன.

அஜீத் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கௌதம்மேனன் படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக பிவிபி சினிமா பட நிறுவனத்திற்காக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.’ஐ’ படத்திற்குப் பிறகு ஷங்கர், ரஜினியை வைத்து ‘எந்திரன் 2’ படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 240 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் அடிபட்டன. இந்நிலையில்தான், ‘எந்திரன் 2’ படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அஜீத்தை வைத்து படம் இயக்குகிறார் என்று பரபரப்பு செய்தி பரவி வருகிறது.

அஜீத்தை வைத்து ஷங்கர் படமெடுக்கப் போகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஒரு அஜீத் ரசிகர், ஷங்கரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேட்டுவிட்டார். ‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தைப் பார்த்துவிட்டு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அப்படத்தைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருந்தார் இயக்குநர் ஷங்கர். இதன் ‘கமென்ட்’ பகுதியில் அஜீத் ரசிகர் ஒருவர், எங்கள் ‘தல’யை வைத்து நீங்கள் படம் இயக்குவதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையா? எஸ்? ஆர் நோ? என கமென்ட் செய்தார். அதற்கு நோ என்று பதில் கமென்ட் போட்டு இந்த விவாகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஷங்கர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி