செய்திகள் 92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…

92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…

92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!… post thumbnail image
முசாபர்நகர்:-உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆக.10ம் தேதி அன்று மன்ட்டு என்ற இளைஞன் கற்பழித்தார்.இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ அறிக்கையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற அந்த இளைஞன் தன்னை கற்பழித்ததாக கூறினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மன்ட்டு கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டி இறந்து விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி