செய்திகள்,திரையுலகம் மகளை விட்டுக்கொடுக்கத் தயாராகும் நடிகர் மஞ்சுவாரியர்!…

மகளை விட்டுக்கொடுக்கத் தயாராகும் நடிகர் மஞ்சுவாரியர்!…

மகளை விட்டுக்கொடுக்கத் தயாராகும் நடிகர் மஞ்சுவாரியர்!… post thumbnail image
கேரளா:-மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளான திலீப்-மஞ்சுவாரியர் ஆகிய இருவரும் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். இந்நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் தற்போது விவாகாரத்து கோரி கோர்ட் படி ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மகளை திலீப்பிடம் இருந்து பிரித்து தன் பக்கம் கொண்டு வர மஞ்சுவாரியர் கொடி பிடிப்பார் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அவரோ, என் மகளை என்னிடமே தர வேணடும் என்று நான் திலீப்பிடம் பிரச்னை செய்ய விரும்பவில்லை. அவள் விருப்பப்படி யாரிடம் இருக்க நினைக்கிறாளோ அவர்களிடம் இருக்கட்டும் என்று தனது நிலையை தெரிவித்துள்ளார். இதனால் திலீப்- மஞ்சுவாரியர் விவாகரத்து வழக்கு எந்த வில்லங்கமும் இல்லாமல் சுமூகமாக முடிந்து விடும் என்கிறார்கள்.

மேலும், தனது சக நடிகைகளான பாவனா, சம்யுக்தா, ஸ்வேதா மேனன், பூர்ணிமா ஆகியோரை திலீப்புடன் இணைத்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர்கள் அனைவருமே நல்லவர்கள். திலீப்பும், நானும் பிரிவதற்கு அவர்கள் யாருமே காரணமல்ல என்றும் பல மாதங்களாக கேரளாவில் பரவி வந்த கிசுகிசுக்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மஞ்சுவாரியர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி