செய்திகள் வீட்டு குளியலறையில் முதலை!…

வீட்டு குளியலறையில் முதலை!…

வீட்டு குளியலறையில் முதலை!… post thumbnail image
அனந்த்:-குஜராத்தின் அனந்த் மாவட்டம் சொஜித்ரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் குளியறையில் முதலை இருப்பதை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்க சென்ற பாரத் படேல் என்பவர் குளியலறையின் மூலையில் ஐந்து அடி நீள முதலை இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக குளியலறை கதவை வெளிப்புறமாக பூட்டிய அவர், அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி கூறினார். வனத்துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த வனத்துறையினர் கூண்டுக்குள் முதலையை பிடித்து அனந்த் மாவட்டத்தின் மலட்டாஜ் கிராமம் அருகே உள்ள ஏரியில் கொண்டு போய் விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி