செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!…

விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!…

விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!… post thumbnail image
சென்னை:-கமலின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளை தாண்டி வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை எடுத்து வந்தபோது இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகளையும் அதே படப்பிடிப்பு தளங்களில் படமாக்கி விட்டார் கமல். அதனால்தான், முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், அப்படத்தையும் உடனடியாக தொடங்கினார் கமல்.

முதல் பாகத்தை தானே தயாரித்தவர், இரண்டாம் பாகத்தில் ஆஸ்கர் பிலிம்சுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து, அப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில, அதன்பிறகு கமல் நடிக்கத் தொடங்கிய உத்தமவில்லன் படப்பிடிப்பும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதனால், விஸ்வரூபம்-2 படத்திற்கு முன்பே உத்தமவில்லன் திரைக்கு வந்துவிடும் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதுகுறித்து தற்போது கமல் வெளியிட்டுள்ள செய்தியில், விஸ்வரூபம் படத்தை விட இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இறுதி கட்ட பணிகளில் கூடுதலான பிரமாண்டத்தை இணைத்து வருகிறோம். அதனால் தான் இவ்வளவு காலதாமதம். ஆனபோதும், உத்தமவிலல்னுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கூட விஸ்வருபம்-2 திரைக்கு வந்து விடும் என்கிறார்.அது எப்போது என்று கேட்டால், எப்போது வேண்டுமானாலும் ரிலீசாகலாம். அடுத்த மாதமோ அல்லது அதற்கடுத்த மாதமோகூட இருக்கலாம். ஆனால் விஸ்வரூபம்-2 வெளியான பிறகுதான் உத்தமவில்லன் வெளிவரும் என்கிறார் கமல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி