செய்திகள்,திரையுலகம் மீண்டும் இசை தமிழில் அமைக்கிறார் சுந்தர்.சி பாபு!…

மீண்டும் இசை தமிழில் அமைக்கிறார் சுந்தர்.சி பாபு!…

மீண்டும் இசை தமிழில் அமைக்கிறார் சுந்தர்.சி பாபு!… post thumbnail image
சென்னை:-பழம்பெரும் வீணை இசை கலைஞர் சிட்டிபாபுவின் மகன் சுந்தர்.சி பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, தூங்கா நகரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். கடைசியாக போராளி படத்திற்கு இசை அமைத்திருந்தார். அதன் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு, கன்னட படங்களுக்கு இசை அமைத்தார்.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அட்டி என்ற படத்திற்கு இசை அமைக்கிறார். இதனை சுராஜ் உதவியாளர் விஜயபாஸ்கர் இயக்குகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர் மா.பா.க ஆனந்த் ஹீரோவாக நடிக்கிறார். அஷ்மிதா ஹீரோயினாக நடிக்கிறார். ராம்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வெங்கடேஷ் அர்ஜூன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி