செய்திகள்,விளையாட்டு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!…

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்.13ல் துவக்கம்!… post thumbnail image
புதுடெல்லி:-12 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்தியாவில் இருந்து நான்கு அணிகளும், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவில் இருந்து தலா 2 அணிகளும், பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு அணியும் இடம்பெறும்.

இதில் பங்கு பெறும் 12 அணிகளில் 11 அணிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12-வது அணியாக தற்போது கரீபியன் பிரிமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி தகுதி பெறும்.
13-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை தகுதிச் சுற்று நடைபெறும். 17-ந்தேதியில் இருந்து லீக் போட்டிகள் தொடங்கும்.முதல் லீக் போட்டியில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா அணியும், 2010-ம் ஆண்டு சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டி சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா, இரண்டாம் இடம் பெற்ற பஞ்சாப் மற்றும் 3-வது இடம் பெற்ற சென்னை அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. 4-வது இடம் பெற்ற மும்பை அணி தகுதி சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால் லீக் பிரிவில் இடம்பெறும்.சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், பஞ்சாப் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இறுதிப்போட்டி அக்டோபர் 4-ந்தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 36 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி