இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதேவி, சற்று கோபத்துடன் கூறியிருப்பதாவது: சினிமாவில் ஜான்வி நடிக்கப்போகிறார் என்று ஏன் தான் எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார்களோ தெரியவில்லை. அவள் கவனம் முழுவதும் இப்போது படிப்பில்தான் இருக்கிறது. இதுபோன்ற செய்திகள் அவளது படிப்பை பாதிக்கும் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்.
பொது நிகழ்ச்சிகளுக்கு மகளை அழைத்து வந்தால் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று அர்த்தமா?. பல வருடங்களுக்கு பிறகு நான் சினிமாவில் நடிக்கிறேன். என்னோடு அவள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசைப்பட மாட்டாளா?. சினிமாவில் என் மகளை அறிமுகப்படுத்த நான் அவளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரவேண்டுமா? வீட்டுக்குள் இருந்தே அறிமுகப்படுத்த முடியாதா?. ஒரு மகளை எப்படி எப்போது கொண்டு வரவேண்டும் என்பது தாயாகிய எனக்குத் தெரியும். மற்றவர்கள் அது பற்றி கவலைப்பட வேண்டாம். என்கிறார் ஸ்ரீதேவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி