செய்திகள்,திரையுலகம் தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…

தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!…

தெலுங்கு ‘கேபிசி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிரஞ்சீவி!… post thumbnail image
ஐதராபாத்:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ என்ற நிகழ்ச்சியை ‘மா’ தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக பரபரப்பா பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

நாகார்ஜுனாவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டுள்ளார் என தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் மிகவும் சுவாரசியமாகவும், நகைச்சுவை கலந்தும் நிகழ்ச்சியை கலகலப்பாக்கியிருக்கிறார்களாம். இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வித்யாபாலன், ஷ்ரேயா, லட்சுமி மஞ்சு, இளம் ஹீரோவான அல்லரி நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சூர்யா நடத்திய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி போன்றே தெலுங்கிலும் நாகார்ஜுனா நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனராம்.சிரஞ்சீவி பங்கேற்ற ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 3ம் தேதியன்று ஒளிபரப்பாக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி