செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் திகில் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…!

திகில் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…!

திகில் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…! post thumbnail image
தமிழில் ‘கிழக்கு சீமையிலே’, ‘உழவன்’, ‘பசும்பொன்’, ‘செல்லகண்ணு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் தற்போது திகிலான படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘அவன் அவள்’ என பெயரிடப்பட்டுள்ளன. இதில் தேவிகா மாதவன், சந்திரிகா என்னும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன், செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ், சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி சீனிவாசன் ஒளிப்பதிவை செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்கிரீஷ் மிரினாளி இயக்குகிறார். இப்படத்தை காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கின்றனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது,

குற்றம் ஒன்றை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகிறான் ஒருவன். காட்டில் பெரிய பங்களா ஒன்றில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கமாகிறது. அந்த பழக்கம் காதலாக மாறி திருமணமும் செய்கிறான். இருவருக்கும் உடல் ரீதியான நெருக்கமும் உண்டாகிறது. அதற்கு பிறகு அவள் காணாமல் போகிறாள். யார் அவள் என்ற திகில் கேள்விக்கு விடைதான் ‘அவன் அவள்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. இப்படத்தின் கதை பயங்கர திகிலாக இருக்கும்.

கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படம் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி