செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!

வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…!

வதந்தியைக் கண்டு ஆவேசப்படும் பிரபல நடிகர்…! post thumbnail image
‘உன்னாலே உன்னாலே’ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் வினய். ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘என்றென்றும் புன்னகை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘அரண்மனை’, ‘சேர்ந்து போலாமா’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

வினய்க்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக செய்திகள் வெளியானது. பெற்றோர் பெண் பார்த்துவிட்டதாகவும் விரைவில் பெங்களூரில் திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமண வேலைகளில் வினய் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து வினயிடம் கேட்டபோது, மறுத்தார். அவர் கூறியதாவது:–

எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. வேறு பணிகளில் இருந்ததால் ‘சேர்ந்து போலாமா’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர இயலவில்லை. இதை வைத்து எனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக கதை கட்டி விட்டனர்.

எனக்கு பெற்றோர் பெண் பார்க்கின்றனர். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. பெண் யார் என்பது தெரிந்ததும் வெளிப்படையாக அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி