இந்நிலையில், அஞ்சலியை இனி மிரட்டியெல்லாம் நடிக்க வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட களஞ்சியம், இப்போது பணிந்து போகத்தொடங்கி விட்டார். அதனால், அவரை சந்தித்து பேசி வழிக்கு கொண்டு வர தனது அபிமானிகள் சிலரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அப்படி களஞ்சியம் தரப்பில் இருந்து சந்திக்க வருகிறார்கள் என்றதும் அஞ்சலியின் தற்போதைய செக்யூரிட்டிகள் அவரை நெருங்கவே விடவில்லையாம்.இருப்பினும், தங்களது நிலையை சொல்லி ஒருவழியாக அஞ்சலியை சந்தித்து சமாதானம் செய்யும் வகையில் பேசினார்களாம். ஆனால் அஞ்சலி அதற்கெல்லாம் மசியவில்லையாம்.
அந்த படத்தில் என்னால் நடிக்கவே முடியாது என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு இப்போது நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று அவர்களை விரட்டியடித்து விட்டாராம் அஞ்சலி.இதனால் சினிமா சங்கங்கள் அனைத்தும் தன்னை கைவிட்டு விட்ட நிலையில், அடுத்து எந்த மாதிரியான முயற்சி எடுப்பது என்பது தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நிற்கிறார் களஞ்சியம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி