செய்திகள்,திரையுலகம் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!…

கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!…

கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!… post thumbnail image
சென்னை:-மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு. இவர் நடிகராக 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது இவரது மகன் கஜேஷும் நாயகனாக அவதாரம் எடுக்கிறார். இவர் அறிமுகமாகும் அந்த படத்துக்கு ‘கல்கண்டு’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை நந்தகுமார் என்பவர் இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக ‘யாருடா மகேஷ் படத்தில்’ நடித்த டிம்பிள் சாப்தே நடிக்கிறார். எந்தவித விளம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழுவினர் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். கூடிய விரைவில் இசை வெளியீட்டையும், தன்னுடைய மகன் அறிமுக விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த ஆனந்தபாபு முடிவு செய்திருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, இது ஒரு ரொமான்டிக் காதல் கதை. இந்த படத்தில் நாகேஷின் இளமைக் காலத்தில் இருந்த சுறுசுறுப்பும், அவருடைய தோற்றமும், காமெடியும் கலந்த நடிகரை தேடிவந்தேன். அப்போதுதான் நாகேஷின் பேரன் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றார்கள்.உடனே, அவரது வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கதையை சொன்னேன். அவர்களுக்கு பிடித்திருந்ததால் உனே ஓகே சொல்லிவிட்டார்கள் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி