செய்திகள்,விளையாட்டு பேய் பயத்தில் அலறும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!…

பேய் பயத்தில் அலறும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!…

பேய் பயத்தில் அலறும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!… post thumbnail image
லண்டன்:-லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து,இந்திய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து வீரர்கள் லண்டனில் புகழ் பெற்ற லாங்காம் ஓட்டலில் தங்கியுள்ளனர். ஆனால், இரவு நேரங்களில் இந்த ஓட்டலில் அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக கூறி வீரர்கள் தங்களது அறையை மாற்றித்தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் அளித்த பேட்டியொன்றில், இலங்கைக்கு எதிரான போட்டியின் போது நான் இங்கு அறையை மாற்றிக் கொண்டேன்.

இங்கு தங்கியிருந்த போது ஒரு நாள் ஓட்டல் அறையில் வெப்பம் அதிகமாக இருந்ததால் என்னால் தூங்க முடியவில்லை. அப்போது திடீரென்று பாத்ரூமில் உள்ள குழாய்கள் அனைத்தும் திறந்து கொண்டு தண்ணீர் கொட்டத் தொடங்கியது. என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு பாத்ரூம் செல்வதற்காக நான் அறையின் விளக்குகளைப் போட்டேன்.விளக்கு எரியத் தொடங்கியதும், குழாய்களில் தண்ணீர் வெளியேறுவது நின்றுவிட்டது. சரி, படுக்கலாம் என்று நினைத்து லைட்டை அணைத்தேன், மீண்டும் குழாய்களில் தண்ணீர் கொட்டத் தொடங்கிவிட்டது. இதனால் நான் நிஜமாகவே பயந்து போய் விட்டேன். உடனே வெளியேறி எனது அறையை மாற்றித்தருமாறு கூறினேன். என்னுடைய பெண் நண்பர் இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்து விட்டார்.

இதே போன்று பேய் பீதி காரணமாக பயந்து போயுள்ள மொயீன் அலியின் மனைவியும் அவருடன் அந்த ஓட்டலில் தங்க மறுக்கிறார் என்பது தெரியும். தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டியின் போது ஓட்டலில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான தொடரின் போது இங்கு தங்குவது சரிப்பட்டு வரவில்லை. ஒரு நாள் நள்ளிரவு 1.30 மணியிருக்கும், நான் அறையில் இருந்த போது, அறைக்குள் வேறு யாரோ இருப்பது போன்று தோன்றியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ்சும் இதே போன்ற அனுபவத்தால் தூங்க முடியாமல் தடுமாறியுள்ளார் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி