செய்திகள்,திரையுலகம் வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!…

வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!…

வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நடிகை பிரியாஆனந்த்!… post thumbnail image
சென்னை:-அரிமா நம்பி படத்தில் மது அருந்தி விட்டு தள்ளாடியபடி நடித்துள்ள ப்ரியா ஆனந்த் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் எங்கு சென்றாலும் அதைப்பற்றியே கேள்வி கேட்கிறார்களாம். மொபைல், பேஸ்புக் என்று யார் யாரோ அவரை தொடர்பு கொண்டு, ஒரு தமிழ்நாட்டு பெண் இதுமாதிரி காட்சிகளில் நடிக்கலாமா? என்று கேட்டு டென்சன் செய்கிறார்களாம்.

இதனால், டைரக்டர்கள் கதைக்கு எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அதன்படி நடிக்க வேண்டியது எனது கடமை. அதுவும் சரக்கு அடிப்பது ஒன்றும் நம் நாட்டுக்கு புதிது இல்லை. தெருவுக்கு தெரு அரசாங்கமே கடை திறந்து விட்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நான் ஒன்றும் நாட்டில் இல்லாத ஒரு விசயத்தை செய்து மக்களை தப்பான வழிக்கு திசை திருப்பி விடவில்லை என்று கடகடவென்று அவர்களுக்கு பதில் கொடுக்கிறாராம் ப்ரியாஆனந்த்.

அதோடு, விபச்சார பெண்ணின் கதை என்றால் அவர் விபச்சாரம் செய்வது போன்று நடித்தால்தான் கதைக்கு பொருத்தமாகும். அதையெல்லாம் குறை சொல்லிக்கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது. அதனால் இதையே சர்ச்சையாக்கிக்கொண்டிருக்காமல் வேறு ஏதாவது உருப்படியான விசயம் இருந்தால் அதைப்பற்றி யோசியுங்கள் என்றும் தன்னிடம் வில்லங்கமாக பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறாராம் ப்ரியாஆனந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி