செய்திகள்,திரையுலகம் சல்மான் கானின் பாதுகாப்புக்கு பல லட்சங்கள் செலவு செய்த தயாரிப்பாளர்!…

சல்மான் கானின் பாதுகாப்புக்கு பல லட்சங்கள் செலவு செய்த தயாரிப்பாளர்!…

சல்மான் கானின் பாதுகாப்புக்கு பல லட்சங்கள் செலவு செய்த தயாரிப்பாளர்!… post thumbnail image
மும்பை:-சல்மான் கான் ‘வான்டட்’ படத்தில் நடித்ததற்குப் பிறகு அவருடைய இமேஜ் உச்சத்திற்குப் போய்விட்டது. அவர் நடித்து வெளிவரும் படங்கள் எல்லாமே சர்வசாதாரணமாக வெற்றியைப் பெறுகின்றன. ஷாரூக் கான், அமீர் கான் உட்பட பலரை பின்னுக்குத் தள்ளி வசூல் நாயகனாக உயர்ந்து நிற்கிறார். சல்மான் நடித்து விரைவில் ‘கிக்’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாதுகாப்புக்காக மட்டுமே பல லட்சங்களை செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.

படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்ற போது லட்சக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு விட்டார்களாம். டில்லியின் சாந்தினி சௌக், பழைய கோட்டை ஆகிய படங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அப்பகுதிக்கு வரும் வழிகளில் எல்லாம் பலத்த பாதுகாப்பை உருவாக்கியிருந்தார்களாம். அதோடு ‘கிக்’ படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு மட்டுமே 100க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து படத்தின் இயக்குனரான சஜித் நாடியட்வாலா கூறுகையில், படப்பிடிப்பு நடைபெறும் போது எந்த தடையையும் நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பிற்காக நிறைய செலவு ஆகும் எனத் தெரியும். ஆனால், அதற்காக யோசிக்கவில்லை. டில்லியில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய போது நடந்து செல்வதற்கே கடினமாக இருந்தது. இருந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் படப்பிடிப்பை நடத்தியது சுவாரசியமாக இருந்தது என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி