செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!…

எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!…

எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!… post thumbnail image
சென்னை:-ரஜினி தற்போது ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் ‘ஐ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இவர்கள் இருவரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.எந்திரன் முடித்த போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டையும் முடித்துவிட்டார் ஷங்கர். அதை ரஜினியிடம் காட்டியபோது இப்போது என்னுடைய உடல் நிலையை பார்க்கும்போது இதனை செய்ய முடியாது என்று கூறி தவிர்த்திருக்கிறார்.

இதனால் ஷங்கர் ஹீரோ எந்திரனை புத்திசாலியாகவும், வில்லன் எந்திரனை செயல்பாடுகள் நிறைந்த முரடனாகவும் ஸ்கிரிப்டை மாற்றினார். நீங்க விநாயகர் மாதிரி உட்கார்ந்த இடத்திலேயே உங்க ஸ்டைல்ல காய் நகர்த்துறீங்க வில்லன்தான் ஓடியாடி உங்களை வெல்ல பார்க்கிறார். அதிக வேலை வில்லனுக்குத்தான் என்று மாற்றி கதை சொன்னதும் அப்படிப்பட்ட பவர்புல் வில்லன் யார்? என்று கேட்டதும் ஆமீர்கான் பெயரை சொல்லியிருக்கிறார் ஷங்கர். சூப்பர் அவர்கிட்ட ஓகே வாங்கிட்டு வாங்க ஆரம்பிச்சிடலாம என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.அமீர்கானுக்கு ஸ்கிரிப்ட் சென்றது. முழுவதும் படித்து பார்த்த ஆமீர் ரஜினியோட ஒரு சீன் நடிச்சாலே பெருமைதான். நீங்க முழு படத்துக்கும் கூப்புடுறீங்க டபுள் ஓகே என்று கூறிவிட்டாராம்.எந்திரனுக்கு இடையில் பணக் கஷ்டம் வந்து கைமாறின மாதிரியான நிலை இதற்கு வந்துவிடக்கூடாது என்ற கருதி உட்கார்ந்து கணக்கு போட்டு பார்த்ததில் பட்ஜெட் 300 கோடியை எட்டியதாம். தெற்கிற்கு ரஜினி, வடக்கிற்கு ஆமீர்கான். தெற்கத்தி டாப் ஹீரோயின் ஒருவர் வடக்கத்தி டாப் ஹீரோயின் ஒருவர், இரு பவர்புல் வில்லன்கள். ஆங்கிலம் தவிர்த்து 6 மொழிகள் என மெகா பட்ஜெட்டை சமர்ப்பிக்க அந்த பெரிய கார்பரேட் நிறுவனத்தின் போர்ட் மீட்டிங்கில் 300 கோடி பட்ஜெட் பாசாகி விட்டதாம்.

படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒளிப்பதிவாளர்கள் இருவர். காட்சி படப்பிடிப்புக்கு ஒருவர். டெக்னிக்கல் சைடுக்கு ஒருவர். உலகின் நம்பர் ஒண் அனிமேஷன் நிறுவனம் டெக்னிக்கல் வேலையை செய்யப் போகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகப் போகும் படம். உலக அரங்கில் இந்திய சினிமாவின் விஸ்வரூபத்தை காட்டப்போகிற படம் என்கிற வகையில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது.எந்த தகவலையும் சம்பந்தப்பட்டவர்கள் உறுதிபடுத்தவில்லை. லிங்காவும், ஐ யும் வெளிவந்த பிறகு ஷங்கர், ரஜினி, ஆமீர்கான் இணைந்து மும்பையில் இதை பிரமாண்டமாக அறிவிக்கப்போகிறார்கள். அப்படி அறிவிக்கும்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்திருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி