செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வீசியது. உயிருக்குப் போராடிய அந்த மாணவி 29ம்தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாணவியை ஓடும் பஸ்சில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த நபர்கள் 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. மற்றொரு குற்றவாளி சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

இந்நிலையில் தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான அக்சய் தாக்கூர், வினய் சர்மா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி