செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பல லட்சங்கள் விரயமாகி விடும் என்பதால் வலிகளையும் பொறுத்துக்கொண்டு நடித்து வருகிறார் விஷால்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காரைக்குடியில் இருந்தபோது, அங்குள்ள ஒரு கேபிள் டிவியில் சமீபத்தில் திரைக்கு வந்த பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில், ஜெய் நடித்த வடகறி ஆகிய படங்கள் ஒளிபரப்பானதை பார்த்த விஷாலுக்கு பெருத்த அதிர்ச்சியாம். இப்படி தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே கேபிள் டிவிக்களில் வந்து விட்டால் மக்கள் எப்படி தியேட்டர் பக்கம் செல்வார்கள் என்று வரிந்து கட்டியவர். உடனடியாக அந்த ஏரியா காவல் நிலையத்துக்கு சென்று புகார் செய்தாராம். அதையடுத்து சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசார் கடுமையாக தண்டித்தார்களாம்.விஷாலின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட கோலிவுட்டின் தயாரிப்பாளர்கள் அவருக்கு போன் போட்டு பாராட்டினார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி