இப்போது இரண்டு படத்தையும் எப்படி அடுத்தடுத்து வெளியிடுவது என குடும்பத்தில் குழப்பம் உருவாகியிருக்கிறதாம். சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள். அப்படியிருக்க ‘மெட்ராஸ்’ படத்தை இந்த மாதம் 18 அல்லது 25ம் தேதிகளில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அப்படிப் பார்த்தால் இரண்டு படங்களுக்கும் இடையில் இரண்டு வாரங்களே இடைவெளி இருக்கும். இதனால் இரண்டு படங்களுக்குமே ஏதாவது பாதிப்பு வரலாம் என நினைத்து தற்போது ‘மெட்ராஸ்’ படத்தை ‘அஞ்சான்’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தள்ளி வைத்துக் கொள்ளலாமா என யோசித்து வருகிறார்களாம்.
அதே சமயம் கார்த்தியின் முந்தைய இரண்டு படங்களான ‘பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களை இப்படி மாற்றி மாற்றி வெளியிடலாம் என முடிவெடுத்துத்தான் இரண்டையுமே தோல்விப் படங்களாக்கிவிட்டார்கள். நாம் கேள்விப்பட்ட வரையில் இப்போது அண்ணனின் ‘அஞ்சான்’ படத்திற்கே முன்னுரிமை கொடுத்து தம்பியின் ‘மெட்ராஸ்’ படத்தை தள்ளி வெளியிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி