செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்!… பிரபல நடிகை ராணி முகர்ஜி பேச்சால் பரபரப்பு!…

நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்!… பிரபல நடிகை ராணி முகர்ஜி பேச்சால் பரபரப்பு!…

நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள்!… பிரபல நடிகை ராணி முகர்ஜி பேச்சால் பரபரப்பு!… post thumbnail image
மும்பை:-நடிகை ராணி முகர்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மர்தானி’ திரைப்படத்தின் டிரைலர்தான் தற்போது பாலிவுட்டின் பேச்சாக இருக்கிறது. பெண் சிறுமிகள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மும்பை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராணி முகர்ஜி நடித்துள்ளார்.

படம் பற்றி ராணி முகர்ஜி கூறுகையில், பெண்களை மையப்படுத்திய படங்கள் நன்றாக ஓடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற இன்னும் பல படங்கள் வரவேண்டும் என்பது எனது ஆசை. இது போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால்தான் தயாரிப்பாளர்களும் இம்மாதிரியான படங்களைத் தயாரிக்க முன் வருவார்கள். நடிப்புத் தொழிலில் உள்ள நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களைப் போன்றவர்கள். நாங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை, கிரியேட்டிவ்வான இயக்குனர்கள் மூலமும், தயாரிப்பாளர்கள் மூலமும்தான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறோம். சுவாரசியமான, சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களைத்தான் நான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தொடர்ந்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

‘மர்தானி’ படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். பெண்களாகிய நாங்கள் சக்தியின் மறுஉருவம். இந்தப் படத்தில் பெண்களின் மன வலிமையைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். நிஜ வாழ்க்கையில் காவல் துறையில் இருக்கும் பெண்களும் ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாவே உழைக்கிறார்கள், ஏன் அதற்கு மேலும் உழைக்கிறார்கள். பெண் அதிகாரிகளைப் பற்றிய கருத்துக்களை அனைவரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி