செய்திகள்,விளையாட்டு இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!…

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்:3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 352/9!… post thumbnail image
நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 457 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய முரளி விஜய் 146 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி (82), புவனேஸ்வர்குமார் (58), முகமது சமி ஆகியோரும் பொறுப்புடன் விளையாடினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. ராப்சன்(20), கேரி பேலன்ஸ் (15) ஆகியோர் களத்தில் இருந்தனர். இன்று தொடர்ந்து ஆடிய இருவரும் அரை சதம் கடந்து நிலைத்து நின்றதால் ஸ்கோர் 150 தொட்டது. ராப்சன் 59 ரன்களிலும், பேலன்ஸ் 71 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகள் சரிந்தன. இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி