செய்திகள்,திரையுலகம் நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…

நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!…

நட்பு வட்டாரங்களை சுருக்கினார் நடிகர் சந்தானம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சந்தானம் ஹீரோ ஆவதற்கு முன்பு கோலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்கள் அவரது நண்பர்கள்தான். இவர் எப்போது படப்பிடிப்புதளத்துக்கு வருவார் என அவர்களெல்லாம் காத்துக்கொண்டிருப்பார்கள். அவர் வந்ததும் அவர்களின் அரட்டை அரங்கம் களைகட்டத் துவங்கி விடும். அதோடு, ஒருவேளை அன்றைய தினம் சந்தானம் வரவேண்டிய வேலை இல்லை என்றால் அவருக்கு போன் போட்டு அத்தனை ஹீரோக்களுமே கலாய்ப்பார்கள்.

இதனால், சந்தானமும், கவுண்டமணி பாணியில் தன்னுடன் நடிக்கும் ஓரிரு ஹீரோக்களை தவிர மற்றவர்களை வா போ என்றே ஒருமையில் அழைப்பார். அந்த அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்வார். அதேபோல் ஹீரோக்களும் அவருடன் ஒருமையில்தான் பேசுவார்கள். வா மச்சான், போ மச்சான் என்பதுதான் அவர்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தையாக இருக்கும்.ஆனால், சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்த பிறகு, அவரது நட்பு நடிகர்கள் பலர் அவருடன் முன்பு மாதிரி பேசுவதில்லையாம். தாங்கள் ஓரிரு ரன் எடுக்கவே தடுமாறிக்கொண்டிருக்க, சந்தானமோ வந்த வேகத்திலேயே சிக்ஸ் – போர் என்று விளாசுகிறாரே என்று நினைக்கும் அவர்கள் அவரையும் தங்களது போட்டி நடிகர் பட்டியலில் சேர்த்து விட்டார்களாம்.

அதனால், இப்போது சினிமா விழாக்களில் அவர்களை கண்டாலும் கண்டுகொள்வதில்லை சந்தானம். ஏதோ புதிதாக பார்ப்பவர்களைப்போன்று எட்ட நின்று அவர்களை நோக்கி ஒரு பார்வை வீசி விட்டு வேகமாக சென்று விடுகிறார். ஆக, பரந்து விரிந்து கிடந்த சந்தானத்தின் நட்பு வட்டாரம் தற்போது தொழில் போட்டி காரணமாக குறுகிப் போய் காணப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி