செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!…

சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!…

சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் கட்டுப் படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மனித வளம் குறைந்து விட்டது. பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டதால் மணமகள் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

எனவே அதை சீரமைக்க ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டி கடந்த டிசம்பரில் இதற்கு ஒப்புதல் அளித்தது.அதன்படி தற்போது அங்குள்ள 31 மாகாணங்களில் 29 மாகானங்கள் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற திட்டத்தை அமல்படுத்த தொடங்கி விட்டன. அதற்கு ஏற்கனவே குடும்பத்தில் ஒரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்ட தம்பதிகள் தகுதி படைத்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து கிழக்கு சீனாவின் ஷெஜியாஸ் மாகாணம் முன்னிலையில் இருக்கிறது. கடந்த மே மாதம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 600 தம்பதிகள் 2–வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி