செய்திகள்,திரையுலகம் மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…

மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!…

மாஸ் படத்திலும் அலம்பல் பண்ணும் பிரேம்ஜி!… post thumbnail image
சென்னை:-வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி என அனைத்து படங்களிலும் அலம்பல் செய்து வந்தவர் பிரேம்ஜி. அதன்காரணமாக, வெங்கட்பிரபு படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தில் பிரேம்ஜியும இருப்பார் என்றாகி விட்டது. ஆனால், பிரியாணியைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து தான் இயக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜியை கழட்டி விட நினைத்தாராம் வெங்கட்பிரபு.

ஆனால், இந்த விசயத்தை அவரிடம் சொன்னபோது கொதித்து விட்டாராம்.இதையடுத்து என்ன நினைத்தாரோ அவர், சில நாட்களில் உனக்கொரு கேரக்டர் உள்ளது. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வேறு நடிகரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் அப்படி செய்தால், என் நிம்மதியை நீ கெடுத்து விடுவாய் என்று சொல்லி அந்த வேடத்தை பிரேம்ஜிக்கு கொடுத்து விட்டாராம் வெங்கட்பிரபு.

அஜீத்தின் மங்காத்தாவில் மட்டும் ஓரளவு அடக்கி வாசித்த பிரேம்ஜி இந்த படத்தில் வழக்கத்தை விட வெயிட்டான வேடம் என்பதால் கூடுதல் அலம்பல் செய்யத் தயாராகி விட்டாராம். வெங்கட்பிரபு படம் என்றால் பிரேம்ஜியின் அலம்பல் இருக்கும் என்பதை தெரிந்த சூர்யாவும் எப்படியோபோகட்டும் என்று கண்டுகொள்ளவில்லையாம். நானும் மாஸ் ஹீரோதான் என்று கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு காலறை தூக்கி விட்டு நடக்கத் தொடங்கி விட்டார் பிரேம்ஜி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி