பின்னர் ஒருகட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கத் தொடங்கியபோதும், கே.பாலசந்தர் இயக்கத்தில் அவ்வப்போது நடித்தவர்கள் எம்.ஜிஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருதுருவங்கள் ஆனார்கள். ஆனபோதும், தங்களது குருவான கே.பாலசந்தரை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை. அவர் எந்த விழாக்களுக்கு வந்தாலும் அவரை முன்நின்று வரவேற்பார்கள். தாங்கள் ஏதேனும் விருதுகள் பெற்றால் அதை வாங்கிக்கொணடு, முதல்வேளையாக அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தனர்.அந்த அளவுக்கு அவர்கள் குருபக்தியுடன் உள்ளனர்.
மேலும், கே.பாலசந்தரை ரஜினி, கமல் இருவருமே அய்யா என்றே அழைக்கிறார்கள். அதேபோல் தங்களின் பிள்ளைகளை அவரை தாத்தா என்று அழைக்கும்படியே வளர்த்துள்ளனர். இதை சில நிகழ்ச்சிகளில் கூறி பெருமை கொள்ளும் பாலசந்தர், எனது மாணவர்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை என்று சொல்லி புழகாங்கிதம் கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி