செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி போதைக்கு அடிமையான வீடியோவால் பரபரப்பு!…

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி போதைக்கு அடிமையான வீடியோவால் பரபரப்பு!…

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி போதைக்கு அடிமையான வீடியோவால் பரபரப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி. 39 வயதாகும் ஏஞ்ஜலினா உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை தற்போது காதலித்து வருகிறார்.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார் ஏஞ்ஜலினா. இதை அவரே பகிரங்கமாக சமீபத்தில் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் ஏஞ்ஜலினாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.ஆஸ்கார் விருது பெற்றவர். சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் 6 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.கடந்த ஆண்டு ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை நியூயார்க்கில் உள்ள பத்திரிகை ஒன்று வெளியிட்டது இந்த பட்டியலில் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.185 கோடி) ஆகும். ஏஞ்ஜலினா ஜூலி சமூக சேவைகளிலும் ஆர்வம் உடையவர் பல்வேரு சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்.

இவ்வாளவு புகழ்பெற்று விளங்கும் ஏஞஜலினா ஜூலி போதைக்கு அடிமையாகி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிஅடையவைத்து உள்ளது அவர் போதையில் தோன்றும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அந்த வீடியோவில் ரத்தம் வற்றிய வெற்று கண்களுடனும் மெலிந்த கைகளுடனும் மெலிந்த மற்றும் அரிப்பு தன்மையுடைய கைகளுடனும் மற்றொரு கையில் டெலிபோனுடன் ஒரு அறையில் இருந்து வெளிவருகிறார்.இந்த வீடியோ 16 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதை தண்டனை பெற்ற போதை பொருள் வியாபாரி பிரங்ளின் மேயர் எடுத்து உள்ளார். 1999ல் அவரிடம் போதை பொருள் ஹெராயின் மற்றும் கோகோயின் வழங்க சென்ற போது ஜூலியின் அனுமதியுடன் அந்த வீடியோவை எடுத்து உள்ளார். அப்போது அவர் தனது தந்தையுடன் பேசி கொண்டு இருந்தார்.

ஏஞ்ஜலினா தன்னுடைய வாழ்க்கையில் முன்பு ஒரு இருண்ட காலம் மற்றும் ஆபத்தான நேரம் இருந்தது என்றும் அதில் தான் தப்பித்து கொண்டதாகவும் கூறி உள்ளார். கூறியுள்ளார்இது குறித்து போதை பொருள் வியாபாரி கூறியதாவது:-ஏஞலினா என்னுடைய வாடிக்கையாளராக பல ஆண்டுகள் இருந்தார்.நான் அவருக்காக ஹெராயின் மற்றும் கோகோயின் விற்றுள்ளேன்.ஒருநாள் அவர் என்னை அழைத்தார்.அவரை ஒரு இடத்தில் இறக்கிவிட கூறினார்.அப்போது அவர் என்னை போதை பொருளை கொண்டுவர கூறினார்.அந்த நேரத்தில் நான் ஒரு வீடியோ கேமிரா வாங்க விரும்பினேன்.அவரிடன் நான் போதை பொருளை கொடுத்து பணத்தை பெற்று கொண்டேன்.எனகூறினார்.மேலும் மேயர் ஜூலியை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 முறை சந்தித்து போதை பொருள் கொடுத்திருப்பதாக கூறி உள்ளார். வீடு அல்லது ஓட்டல்களில் இந்த சந்திப்பு நடைபெறும் . ஹெராயின் அல்லது கொக்கையின் 6 ஆயிரம் அளவிற்கு அவர் போதை பொருள் வாங்குவார் என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி