சென்னை:-ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து இரவு 11 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றுக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.வயிறு சம்பந்தப்பட்ட சில பரிசோதனைகள் வைகோவுக்கு மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி