அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!…

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!…

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!… post thumbnail image
காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா, உலக வங்கி முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே கடந்த 14–ந்தேதி மீண்டும் மறு ஓட்டு பதிவு நடந்தது. இதில் முதலிடம் பிடித்த அப்துல்லா அப்துல்லா மற்றும் 2–வது இடம் பிடித்த அஷ்ரப் கானி ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டு போட்டனர். அதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முதல் கட்ட முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் அதிரடி திருப்பமாக முதல் தடவை நடந்த தேர்தலில் போது 2–வது இடம் பிடித்த அஷ்ரப் கானி அமோக வெற்றி பெற்றார்.இவர் 56.4 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவுக்கு 43.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த முடிவை அப்துல்லா அப்துல்லா ஏற்க வில்லை. தேர்தலில் தொழில் முறை ரீதியிலான முறைகேடுகள் நடந்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராகும் அஷ்ரப் கானிக்கு 65 வயதாகிறது. 1980–ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் சோவியத் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் இருந்தது எனவே 1977–ம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறி அமெரிக்கா சென்றார்.அங்கு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பினார். உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணராக இவர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி நலிவடைந்துள்ள ஆப்கானிஸ்தானை மீண்டும் பொலிவுடன் வளமானதாக உருவாக்குவதே என்ற தனது கனவுடன் கள மிறங்கியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி