செய்திகள் பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்த ஆசிரியர்கள்!…

பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்த ஆசிரியர்கள்!…

பள்ளிக்கூட கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்த ஆசிரியர்கள்!… post thumbnail image
மதுரா:-உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பானிகோன் நடுநிலைப் பள்ளி உள்ளது. அரசு பள்ளியான அதில், ஆசிரியர்கள் ஆபாசப்படம் பார்த்ததாக மதுரா மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஷியாம் பிரகாஷ் யாதவுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் உதவி தொடக்க கல்வி அதிகாரி அப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர் பிரவீன் குமாரின் செல்போனில் ஆபாச வீடியோ படம் பதிவாகி இருப்பதை கண்டுபிடித்தார். அதில், பள்ளி கம்ப்யூட்டரில் தலைமை ஆசிரியர் ஆபாசப்படம் பார்க்கும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவின்பேரில் தலைமை ஆசிரியர் மகாவீர் பிரசாத், உதவி ஆசிரியர் மோகர்சிங், பள்ளி ஊழியர் ஜெய்வீர்சிங் ஆகியோர் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பகுதிநேர ஆசிரியர் பிரவீன் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி