ஜூலை 5ம் தேதி நடைபெற்ற விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் ‘தலைவா’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு ‘மனம் கவர்ந்த நாயகன்’ விருது பெற்றார். ஏ.ஆர்.முருகதாஸிடம் விருது பெற்ற விஜய்யிடம் மீண்டும் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப் படுகிறீர்கள் என கேட்கப்பட்டது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப் படுவதாக தெரிவித்தார் நடிகர் விஜய்.
மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் என அளித்த பட்டம் குறித்து விஜய்யிடம் கருத்து கேட்டதற்கு ரசிகர்கள் எனக்களித்த ‘இளையதளபதி’ என்னும் பட்டமே எனக்கு போதும் என தெரிவித்தார்.
மேலும் இந்த விருதை நான் எனக்காக பெற்றுக் கொள்ளவில்லை ‘தலைவா’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்திற்காக பெற்றுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். ‘தலைவா’ தன் வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படம் எனவும் கூறினார் விஜய்..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி